திமுக எம்.பி.க்கள் கூட்டம்: ஆலோசித்தது என்ன?

Published On:

| By Kavi

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜனவரி 29) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

2023 ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி கூடுகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதல் முறையாக இக்கூட்ட தொடரில் உரையாற்றுகிறார்.

ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை இரண்டாவது அமர்வும் நடைபெற உள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நீட், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்புவது தொடர்பாகவும்,

மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டப்படும், சேது சமுத்திரத் திட்டம், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை, ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவரிடம் கொடுக்கப்பட்டுள்ள மனு ஆகியவை பற்றி கேள்வி எழுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரியா

“நவீன மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்”- முதல்வர் ஸ்டாலின்

அப்பாயின்ட்மென்ட் இல்லையா? மாநில துணைத் தலைவரையே சந்திக்க மறுத்த அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share