திருச்சியில் நாளை மார்ச் 9-ந் தேதி நடைபெறும் திமுகவின் மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சி சிறுகனூரில் திமுகவின் மாநில மாநாடு நாளை நடைபெறுகிறது.

இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.
- 500 ஏக்கரில் 10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.
- ‘ஸ்டாலின் தொடரட்டும்- தமிழ்நாடு வெல்லட்டும்’ என்கிற தலைப்பில் திருச்சி மாநாடு நடைபெறுகிறது.
- 2021-ம் ஆண்டு மாநாடு நடைபெற்ற அதே இடத்திலேயே தற்போதும் மாநாடு நடைபெறுகிறது.
- திறந்தவெளி மாநாடாக நடைபெறுகிறது.
- தொண்டர்கள் அமருவதற்கு 200 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
- 25,000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
- தொண்டர்கள் அமரும் பகுதியில் இளஞ்சிவப்பு நிறத்தில் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன.
- திருச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்பது எதிர்பார்ப்பு.
- மாநாட்டு திடலில் 5 லட்சம் நாற்காலிகள் போடப்படும்.
- அனைவருக்கும் கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- அமைச்சர் கே.என்.நேரு மாநாட்டு ஏற்பாடுகளை இரவு பகலாக பம்பரமாக சுழன்று செய்து வருகிறார்.
மாநாட்டு நிகழ்ச்சிகள்
- மாநாட்டின் தொடக்கத்தில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் மு.க.ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றி வைக்கிறார்.
- திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசைக் கச்சேரி நடைபெறும்.
- மாலையில் மாநாட்டுத் திடலுக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரை கி.மீ. நீள ‘ரேம்ப்’பில் தொண்டர்கள் மத்தியில் நடந்து வருகிறார்.
- திமுக தலைவர்கள் பேசிய பின்னர் முதல்வர் ஸ்டாலின் நிறைவுரையாற்றுவார்.
அமைச்சர் நேரு சொன்னது என்ன?
- அமைச்சர் கே.என்.நேரு மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுகவுக்கு திருப்பு முனை மாநாடாக திருச்சி மாநாடு அமையும்.
போக்குவரத்து மாற்றங்களை காவல்துறை செய்துள்ளனர். - கடந்த தேர்தலின் போது இதே இடத்தில் மகளிர் உரிமைத்தொகை போன்ற 7 வாக்குறுதிகளை அறிவித்தார். அதேபோன்று இந்த மாநாட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.
