ஜோகோவிச் நட்பு : கோலி நெகிழ்ச்சி!

Published On:

| By christopher

மொழி, இனம், நாடு கடந்து வெவ்வேறு விளையாட்டுத்துறையை சேர்ந்த உலகின் தலைசிறந்த வீரர்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளையும், நட்பையும் பரிமாறிக்கொள்வதை காண்பது என்பது சுவாரசியமானது.

அந்தவரிசையில் டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியா நாட்டைச்சேர்ந்த நோவோக் ஜோகோவிச் – கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் விராட் கோலி இருவரும் தங்களது நட்பை குறித்து வெளியிட்டுள்ள தகவல் பலரையும் கவர்ந்துள்ளது.

தற்போது ஆஸ்திரேலியா ஓபனில் விளையாடி வரும் ஜோகோவிச் அளித்த ஒரு பேட்டியில், “விராட் கோலியும் நானும், சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மெசேஜ் மூலமாக பேசி வருகிறோம். இதுவரை நாங்கள் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் என்னைப் பற்றி பெருமையாக பேசுவதை பாக்கியமாக கருதுகிறேன். அவரின் சாதனைகளை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தூரில் இன்று (ஜனவரி 14) இரவு நடைபெறும் இந்தியா – ஆப்கானிஸ்தான் 2வது டி20 போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்த விராட்கோலி, ஜோகோவிச்-க்கு பதிலளித்துள்ளார். இதனை பிசிசிஐ வீடியோவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதில், “ஜோகோவிச் உடன் எனக்கு ஏற்பட்ட பழக்கம் யதார்த்தமானது. ஒரு முறை அவர் இன்ஸ்டாகிராம் கணக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது Hi சொல்லலாம் என மெசேஜ் செய்தேன். ஆனால், அவரிடம் இருந்து ஏற்கனவே எனக்கு மெசேஜ்கள் வந்திருந்தன. நான் அதை கவனிக்கவில்லை. அதனால் போலி கணக்கு என நினைத்தேன். அதன்பின் அது அவரது கணக்கு தான் என்று உறுதி செய்து நாங்கள் மெசேஜில் பேசிக்கொண்டோம்.

அவரின் சாதனைகளுக்கு நான் வாழ்த்து கூறினேன். நான் சமீபத்தில் எனது 50வது சதம் விளாசியபோது அவர் எனக்காக இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்திருந்தார். சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்களுடன் பழகுவது அருமையான விஷயம். அவர் இந்தியா வந்தாலோ அல்லது நான் அவர் விளையாடும் நாடுகளுக்கு சென்றாலோ நிச்சயமாக அவரை நேரில் சந்திப்பேன்” என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

குண்டூர் காரம் – விமர்சனம்!

கேப்டன் மில்லர்: உதயநிதிக்கு தனுஷ் நன்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share