திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதிகள் எத்தனை என்பது ஒப்பந்தம் கையெழுத்தாகும்போதுதான் தெரியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இன்று ஜனவரி 30-ந் தேதி பதிலளித்த செல்வப்பெருந்தகை, திமுகவிடம் 41 MLA சீட் பிளஸ் 1 ராஜ்யசபா MP சீட் கேட்டதாக பத்திரிகையாளர்கள்தான் சொல்கிறீர்கள். எங்களுக்கு தெரியாது. அது உண்மை இல்லை.
ராகுல் காந்தி- கனிமொழி பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பது தெரியாது. அப்படி தெரிந்திருந்தாலும் கூட அதை பத்திரிகையாளர்களிடம் சொல்வது சரியானது அல்ல.
காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் எத்தனை என்பது தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும்போதுதான் தெரியவரும் என்றார்.
