காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும் ஆர்டர்லிகளை திரும்பி அனுப்ப டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா 75ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடப்போகிறது. ஆனால் இன்னமும் ஆங்கிலேய காலத்து ஆர்டர்லி அடிமை முறை தொடருவது வெட்கக்கேடானது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது.
ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும். ஆனால் அந்த வார்த்தை அரசிடம் இருந்தோ, காவல்துறை தலைமையிடம் இருந்தோ வருவதில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டிருந்தது.
இந்நிலையில் டிஜிபி அலுவலகத்தில் இன்று காலை டிஜிபி சைலேந்திர பாபு காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது உயரதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும் ஆர்டர்லிகளை திருப்பி அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.
வங்கிக் கொள்ளை: 4 தனிப்படை அமைத்து தேடுதல்!