ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தல்- தமிழர் உட்பட 3 பேர் கைது

Published On:

| By Mathi

Srilanka Arrest

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒரு தமிழர் உட்பட 3 பேர், கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். Deportation from India to Sri Lanka – 3 Arrested

இலங்கையில் பண மோசடி, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய 3 பேர், அந்நாட்டைவிட்டு தப்பி வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.

ADVERTISEMENT

இந்த 3 குற்றவாளிகளும் இந்தியாவில் இருப்பதை உறுதி செய்த இலங்கை அரசு மூவரையும் நாடு கடத்த கோரிக்கை விடுத்தது. இதனடிப்படையில் இந்தியாவில் பதுங்கி இருந்த சிங்களரான மாதிவெலகே ஆசித சாகர குணதிலக்க, சுமித் ரோலன்ட் பெர்ணான்டோ மற்றும் தமிழரான செல்வராஜ் கபின் ஆகிய 3 பேரும் இலங்கைகு நாடு கடத்தப்பட்டனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இந்த மூவரும் கொழும்பு விமான நிலையத்திலேயே அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share