நடிகை ராஷ்மிகா மந்தனா டீப் ஃபேக் வீடியோ வழக்கில் 4 பேரிடம் டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
டீப் ஃபேக் வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனாவும் வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும் டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் என்றும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேசிய மகளிர் ஆணையம் டெல்லி போலீஸிடம் விரிவான அறிக்கையைக் கேட்டிருந்தது.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா டீப் ஃபேக் வீடியோ வழக்கில் தொடர்புடைய 4 பேரிடம் விசாரித்து வருவதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் வீடியோவை உருவாக்கியவர்கள் மற்றும் பதிவேற்றியவர்களை தேடி வருவதாகவும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
அரசு பேருந்துகளில் கட்டணமின்றி நிவாரண பொருட்கள் அனுப்பலாம்: அமைச்சர் சிவசங்கர்