அழுகாச்சி பாத்திரங்களுக்கு இவரே ‘ரோல் மாடல்’
தீபா சங்கர். சீரியல் நடிகை, யூடியூப் பிரபலம், நடன ஆசிரியர், திரைப்பட நட்சத்திரம் என்று இவருக்கென்று சில அடையாளங்கள் உண்டு. அனைத்தையும் மீறி ஈர்ப்பது வெள்ளந்தியாகத் தெரிகிற இவரது நெல்லை வட்டார பேச்சு. deepa sankar who resound the native voice in cinema
இயல்பான, எளிமையான வசனங்களை ‘யதார்த்தம்’ தோயப் பேசி, கடந்த தலைமுறையின் மனிதர்களை இன்றைய ரசிகர்களுக்கு நினைவூட்டும் கலைஞர்களில் ஒருவர் தீபா சங்கர். நாயகனின் அக்கா, அம்மா, அத்தை எனத் தொடங்கி கதையில் வரும் அழுகாச்சி பாத்திரங்களுக்கு இவரே ‘ரோல் மாடல்’ என்று சொல்லத்தக்க வகையில், தமிழ் திரையுலகில் பல்வேறு பாத்திரங்களில் மிளிர்ந்து வருபவர்.
தமிழ்நாட்டின் எந்த வட்டாரத்தில் நிகழும் கதை என்றாலும், அதற்கு தீபா சங்கர் பொருத்தமாக இருப்பார். காரணம், அங்கிருப்பவர்கள் போன்றே தோற்றத்தையும் உடல்மொழியையும் மாற்றிக் கொள்வதற்கான மெனக்கெடலும் கற்றலும் இவரிடத்தில் உண்டு.
அந்த தேடலும் உழைப்பும்தான், இப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள், திரைப்படங்களில் தொடர்ந்து இவர் முகத்தை நாம் காண அடிப்படையாக இருக்கிறது.

இசைக்கல்லூரியில் பற்றிய தீப்பொறி! deepa sankar who resound the native voice in cinema
1987ஆம் ஆண்டு ஜுன் 10ஆம் தேதி பிறந்தார் தீபா. இவரது பெற்றோர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆசிரியராக வேலை பார்த்த தந்தை, எப்போதும் தவறுகளைச் சுட்டிக் காட்டி திருத்தங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கும் தாய், மாறி மாறி பாசத்தையும் சண்டையையும் பொழிகிற உடன்பிறப்புகள் என்று சாதாரண மனிதருக்கான அத்தனை அம்சங்களும் தீபாவின் சிறு வயது வாழ்வில் நிறைந்திருந்தது.
சுற்றியிருக்கும் கிராமத்து வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியதாக இருந்தது இவரது பால்ய பருவம். பிற்காலத்தில் நடிகையாகிறபோது, அவையே அடிப்படையாக அமைந்தன.
பள்ளிக்காலத்திலேயே நடனம் ஆடுவதில் தீபாவுக்கு ஆர்வம் அதிகம். அதிகமாக திரையரங்குகளுக்கு போக இயலாத கட்டுப்பாடுகள் குடும்பத்திலும் உறவினர்களிடத்திலும் இருந்தபோதும், திருவிழா காலத்தில் தான் பார்த்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வழியே தீபாவின் கனவுகள் வண்ணம் பூசிக் கொண்டன.
கல்லூரி படிப்பின்போது, அதற்கேற்றவாறு இசைக்கல்லூரியில் சேர்ந்தார் தீபா. அந்த காலகட்டத்தில், உடனிருந்த தோழியர் அனைவருமே ‘உனக்கு நல்லா நடிக்க வருது’ என்று பாராட்டியிருக்கின்றனர். அந்த பாராட்டுகளே, ‘மெட்டி ஒலி’ தொடரில் நடிக்கப் புதுமுகங்கள் தேவை’ என்ற விளம்பரத்தைப் பார்த்து, அதற்கான தேர்வில் உடனடியாகத் தீபாவைப் பங்கு பெற வைத்திருக்கிறது.
சில நூறுக்கணக்கில் அங்கு வந்தவர்களை மீறி, அதில் தேர்வாகி நடிக்கிற வாய்ப்பைத் தீபாவுக்குத் தந்தது.
மெட்டி ஒலி தொடர் அவருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல அறிமுகத்தைத் தந்தது. பிறகு முகூர்த்தம், மலர்கள், கோலங்கள், மேகலா தொடர்களில் நடித்தார் தீபா.

திருமணத்திற்கு போட்ட கண்டிஷன்! deepa sankar who resound the native voice in cinema
இடைப்பட்ட காலத்தில் சங்கர் என்பவருடன் தீபாவுக்குத் திருமணம் ஆனது. ’சினிமாவில் தான் நடிக்க கணவராக வருகிறவர் தடை சொல்லக் கூடாது’ என்ற நிபந்தனையைத் தன்னைப் பெண் பார்க்க வந்தவர்களிடத்தில் சொல்லி வந்தவர் தீபா.
எந்தக் கேள்விகளும் இல்லாமல் அதனை ஏற்றுக்கொண்டார் என்ற காரணத்திற்காகவே சங்கர் மீது தீபாவுக்கு அதீத மரியாதை உண்டு.
திருமணத்திற்குப் பிறகு குழந்தை பிறப்பு, வளர்ப்பு மற்றும் தினசரி வாழ்க்கைக்குண்டான பிரச்சனைகளால் உருவம் மாறியது. deepa sankar who resound the native voice in cinema
அப்போதும், ‘கார்த்திகை பெண்கள்’ தொடரில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு தீபாவைத் தேடி வந்தது. அது, அவரது நடிப்பு வாழ்வில் இடைவெளி விழுந்துவிடாமல் காத்தது.
அதன்பிறகு அவணி ராணி, மரகத வீணை, சரவணன் மீனாட்சி சீசன்2, லட்சுமி ஸ்டோர்ஸ், நாச்சியாபுரம், செந்தூரப்பூவே, அன்புடன் குஷி என்று தொடர்களில் தொடர்ந்து நடித்தார்.
குக்கு வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, காமெடி ராஜா கலக்கல் ராணி என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது தீபாவின் பிரபல்யம் இன்னும் அதிகமானது.
அதுவே, இன்று ‘தீபா அக்கா’ என்று சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உரிமையோடு ‘கமெண்ட்’ இடும் அளவுக்குப் புகழ் வாழ்க்கைக்கு வித்திட்டிருக்கிறது.
பெயர் வாங்கித் தந்த வேலுநாச்சியார் ராணி deepa sankar who resound the native voice in cinema
திரையுலகைப் பொறுத்தவரை, தீபா அறிமுகமான படம் ‘மாயாண்டி குடும்பத்தார்’. இது அவர் சீரியல் நடிப்பைப் பார்த்து கிடைத்த வாய்ப்பு. பிறகு ‘வெடிகுண்டு முருகேசன்’ படத்திலும் நடித்தார்.
திருமணம், சீரியல் வாய்ப்புகள், எடை அதிகரிப்பால் மாறிய தோற்றம் என்று திரையுலகில் இருந்து விலகி நின்றவரை மீண்டும் அழைத்து வந்தது ‘கிடாரி’.

பிறகு ‘செம’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றபோது, நேரில் இவரது நடிப்பைக் கண்டிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். அதன்பிறகே ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்தியின் அக்கா ஆக நடிக்க வைத்திருக்கிறார். அந்த படத்தில் வந்த ‘வேலுநாச்சியார் ராணி’ பாத்திரம் தீபாவை தமிழ்நாடெங்கும் தெரிந்தவராக்கியது.
பிறகு மகாமுனி, சில்லுகருப்பட்டி தொடங்கி பல படங்களில் நடித்தார் தீபா. இரண்டு ஆண்டுகளில் சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள். அவற்றில் ஒன்று, நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’. அப்படத்தில் தீபா ஏற்ற ப்ரீதி பாத்திரம், இவருக்கென்று மேலும் பல நகைச்சுவை பாத்திரங்களை இயக்குனர்கள் உருவாக்க அடிப்படையாக அமைந்தது.

சீரியல்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாம் பார்க்கிற தீபாவைத் தாண்டி வீட்ல விசேஷம், சொப்பன சுந்தரி, தண்டட்டி, போகுமிடம் வெகுதூரமில்லை என்று சில திரைப்படங்கள் ரசிகர்கள் நினைவில் கொள்ளத்தக்க படங்களாக உள்ளன. இது போன்ற வேறுபட்ட கதை சொல்லலின் ஒரு பகுதியாக அவர் தொடர்ந்து இடம்பெற்று வருவது திரையுலகில் இவருக்கான வரவேற்பைக் காட்டுகிறது. deepa sankar who resound the native voice in cinema
மனதின் ஆழத்தில் கொண்டிருக்கிற பற்றுதலும், அதை நோக்கிய தேடலுக்காகத் தன்னை தயார்படுத்துகிற உறுதிப்பாடும், இன்றிருக்கும் பெண் குணசித்திரக் கலைஞர்களில் முதன்மை வரிசையில் இவரை இடம்பெறச் செய்திருக்கிறது.
இதோ, இந்த ஆண்டில் மட்டும் காதல் என்பது பொது உடமை, ட்ராகன், பெருசு என்று இதுவரை 9 படங்கள் இவரது நடிப்பில் வெளியாகியிருக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இனி வரும் ஆண்டுகளிலும் இந்த நிலை தொடர வேண்டும். அது மட்டுமல்லாமல், தீபாவின் புதிய பரிமாணங்களைத் திரையில் கண்டு ரசிகர்கள் மகிழத்தக்க வகையில் அவ்வாய்ப்புகள் அமைய வேண்டும். deepa sankar who resound the native voice in cinema