சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்: என்ன காரணம்?

Published On:

| By Kavi

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்னதாக இங்கு பராமரிப்பு பணிகள் நடக்க இருக்கிறது.

இதனால் நாளை (மே 24 – வெள்ளிக்கிழமை) அடுத்த ஜூன் மாதம் 2-ம் தேதி வரை 10 நாட்களுக்கு சென்னையில் நான்கு மண்டலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

குறிப்பாக 9-வது மண்டலமான சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள மந்தைவெளி, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலை புரம், நந்தனம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை மற்றும் 13-வது மண்டலமான அடையாறு பகுதிக்கு உட்பட்ட பெசன்ட் நகர், மடிவின்கரை, பேபி நகர், பெரியார் நகர், கருணாநிதி நகர், கலாஷேத்ரா காலனி, வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவள்ளுவர் நகர், ஏ.ஜி.எஸ்.காலனி.

14-வது மண்டலமான பெருங்குடி பகுதிக்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், காவேரி நகர், திருமலை நகர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், காமாட்சி காலனி, ஜல்லடியன்பேட்டை மற்றும் 15-வது மண்டலமான சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள நீலாங்கரை, சரஸ்வதி நகர், ஒக்கியம் – துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், எழில் நகர், கண்ணகி நகர், உத்தண்டி, பனையூர், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி மற்றும் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

பொதுமக்கள் குடிநீர் விநியோக முறையை கவனத்தில் கொண்டு தேவையான குடிநீரை சேமித்துத் வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https//cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்யலாம். குடிநீர் விநியோகம் எந்தவித தடையும் இன்றி வழக்கம் போல் சீரான முறையில் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: தினமும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துபவரா நீங்கள்?

கிச்சன் கீர்த்தனா: அவரைப்பருப்பு சாதம்!

கடவுளின் தூதரா மோடி? ஆ.ராசா பளிச் பதில்!

பூரி ஜெகன்நாதர் கோயிலில் உள்ள மர்மம் என்ன? யார் அந்த தமிழர் வி.கே.பாண்டியன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share