ரோஹித் வெமுலாவின் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுள் பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவும் ஒருவர். சில நாட்களுக்கு முன்பு அவர் பதவியேற்க வந்ததையொட்டி, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களும், 2 ஆசிரியர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டநிலையில், துணைவேந்தர் அப்பாராவ் மற்றும் பல்கலைக்கழக துறை தலைமைப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தின் அறிக்கையில், ‘அங்கீகரிக்கப்படாத சிலைகள், புகைப்படங்கள் அல்லது எந்த ஒரு அங்கீகாரமற்ற உருவங்களையும், பல்கலைக்கழக வளாகத்தில் வைக்க அனுமதியில்லை. தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டபின் அவை அகற்றப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய பல்கலைக்கழக ஆய்வு மாணவர் சுன்கண்ணா, ‘‘ரோஹித்தின் சிலையை அகற்ற விடமாட்டோம். அகற்றினால், அதை மறுபடி எழுப்புவோம். எங்களின் போராட்டத்தை அவர்களால் நிறுத்த முடியாது” என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர், பேராசிரியர் விபின் ஸ்ரீவத்சவா, ’பல்கலைக்கழக நிர்வாகக் கூட்டம் நடந்தது உண்மை. ஆனால், அந்தச் சிலையை அகற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்படவில்லை’ என மறுப்புத் தெரிவித்துள்ளார்.�,
dரோஹித் வெமுலாவின் சிலை அகற்றப்படுமா?
Published On:
| By Balaji

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel