கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கத்தால் சிறுநீர் துவாரங்களில் ஏற்படக்கூடிய அரிப்பு, வலி போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது வெள்ளரி. வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றையும் போக்கக்கூடிய வெள்ளரியில் புதினா சேர்த்து சுவையான லஸ்ஸி செய்து அருந்துங்கள். கோடையைக் குளுமையாக்குங்கள்.
என்ன தேவை?
- வெள்ளரிக்காய் – 2 (தோல் சீவி, துருவவும்)
- புதினா இலைகள் – கால் கப்
- தயிர் – ஒரு கப்
- தோல் சீவிய இஞ்சி – அரை இஞ்ச் அளவு
- கறுப்பு உப்பு – கால் டீஸ்பூன்
- சீரகத்தூள் – சிட்டிகை
- எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெள்ளரித் துருவலுடன் புதினா, தயிர், இஞ்சி, கறுப்பு உப்பு, சீரகத்தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து வடிகட்டவும். மேலே ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.