தீபாவளி பண்டிகை: மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு!

Published On:

| By Selvam

crackers burst warning government officials

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் தீக்காயம் மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் பொது சுகாதார மருத்துவத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தீபாவளி பண்டிகையானது நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட தமிழக அரசின் அனைத்து துறை சார்பிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையானது எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தீபாவளியை முன்னெச்சரிக்கையுடன் கொண்டாட பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்ட துணை இயக்குநர்களுக்கும் பொது சுகாதார மருத்துவத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள், உடலுறுப்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தீக்காயங்களுக்கான மருந்துகளை போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும்

குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் முன்னிலையில் பெரிய ஆடைகள் இல்லாமல் காட்டன் துணிகளை அணிந்து வெடி வெடிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: பிரகலாத் ஜோஷி அறிவிப்பு!

காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றிய ஓபிஎஸ்

BiggbossTamil7: வாராவாரம் இதைத்தானே செய்றோம்? ஒப்புக் கொண்ட புல்லி கேங்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share