இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது : பங்கேற்கும் தலைவர்கள் யார் யார்?

Published On:

| By Pandeeswari Gurusamy

CPI 26th state conference begins today

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சேலத்தில் இன்று (ஆகஸ்ட் 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26ஆவது மாநில மாநாடு இன்று தொடங்கி வரும் 18 வரை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள நேரு கலையரங்கில் தொடங்கிய மாநாட்டில் முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றினார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை அக்கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மூர்த்தி ஏற்றி வைத்தார்.

தேசி​யப் பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா, அமர்​ஜித் கவுர், டாக்​டர் கே.​நா​ராயணா, ஆனி ராஜா, சி.எச்​. வெங்​க​டாசலம், டி.எம்​.மூர்த்தி உள்​ளிட்ட தலை​வர்​கள் பேசுகின்​றனர். நாளை மாலை மாநிலச் செயலா​ளர் இரா.​முத்தரசன் தலை​மை​யில் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்​பிலான நிகழ்வில் முதல்​வர் ஸ்டா​லின் பங்​கேற்று நிறைவுரை​யாற்​றுகிறார்.

ADVERTISEMENT

மேலும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், சிபிஐ (மா-லெ-விடுதலை) மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன். இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசிய தலை​வர் கே.எம்​.​காதர் மொய்​தீன், மனிதநேய மக்​கள் கட்சி தலை​வர் எம்​.எச்​.ஜ​வாஹிருல்​லா உள்​ளிட்​டோர் உரையாற்றுகின்றனர்.

ஆகஸ்ட் 18ம் தேதி மாநாட்டு பேரணி சேலம் போஸ் மைதானத்தில் பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share