துணை ஜனாதிபதி தேர்தல் : தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதா கிருஷ்ணன் அபார வெற்றி!

Published On:

| By christopher

cp radhakrishnan become deputy president with 452 votes

துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இன்று (செப்டம்பர் 9) துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ADVERTISEMENT

அதன்படி ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கினர்.

இந்த நிலையில் இன்று காலை முதல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் இரு அவைகளில் உள்ள எம்.பி.க்களும் தேர்தலில் வாக்களித்தனர்.

ADVERTISEMENT

மாலை 6 மணியளவில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமுள்ள 788 (மக்களவை 543, மாநிலங்களவை 245) உறுப்பினர்களில், மாநிலங்களில் 5 இடங்களும், மக்களவையில் ஒரு இடமும் காலியாக உள்ளது. இதனால் வாக்களிக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 782 ஆக இருந்தது. இதில் 392 உறுப்பினர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றியாளர் ஆவார்.

அந்த வகையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி விட 152 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share