சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது!

Published On:

| By Selvam

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

coromandel express train derails odisha

ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிசாவின் பகானா என்ற இடத்தில் வந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நான்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காயமடைந்த பயணிகளை மீட்கும் பணியில் ரயில்வே துறை அதிகாரிகளுடன் உள்ளூர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமத்திற்கிடையே மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

செல்வம்

கொலை: இரண்டே நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த போலீஸ்!

அது நாடாளுமன்றம் அல்ல… பாஜக அலுவலகம் : எம்.பி வெங்கடேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share