மத்திய அரசுப் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வின் கேள்வியில் தந்தை பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி பெரும் சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. Controversial Question on Periyar
யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார் என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில்களில் தந்தை பெரியார் பெயர், ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’ என ஜாதிப் பெயருடன் இடம் பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தந்தை பெரியார் 1920-களிலேயே தமது பெயருடன் இருந்த ஜாதிப்பெயரை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
