ராஜஸ்தானில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, காங்கிரஸ் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியுள்ளது எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
இதனையடுத்து 13 மாநிலங்களை சேர்ந்த 89 தொகுதிகளுக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 13 மக்களவை தொகுதிகளும் உண்டு. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று(ஏப்ரல்21) நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தாலியை கூட விட்டுவைக்காது!
அவர், ”நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் உங்களது(இந்துக்கள்) செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் (இஸ்லாமியர்கள்) பகிர்ந்தளிப்பார்கள். யாரிடம் இருந்து செல்வத்தை வாங்கி அதை யாருக்குப் பிரித்துத் தருவார்கள்? கஷ்டப்பட்டுச் சம்பாதித்த செல்வத்தை இப்படி இழக்க யார் தயாராக இருப்பார்கள்? இதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே, இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலியை கூட விட்டுவைக்காது” என்று மோடி காட்டமாக பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டானதை அடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரதமர் மோடி தொடர்ந்து இப்படி தான் பேசி, மக்களை கலவரத்திற்கு தூண்டி விடுகிறார் என எதிர்க்கட்சிகள் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
சவாலை ஏற்க மோடி தயாரா? – காங்கிரஸ்
இதுகுறித்து தேசிய காங்கிரஸின் ஊடக தலைவர் பவன் கெராவும் பேசுகையில், “பிரதமர் மீண்டும் பொய் கூறுகிறார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இந்து முஸ்லீம் என்று எங்கேயாவது ஒரு வரி எழுதப்பட்டிருந்தால் அதைக் எங்களுக்கு காட்டுங்கள் என்பதே எங்களின் சவால். எங்களின் இந்த சவாலை ஏற்க மோடி தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே போன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “மோடியால் தவறுதலாகக் கூட உண்மையைச் சொல்ல முடியாது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மோடியின் இந்த பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குவியும் கண்டனங்கள்!
இதே போன்று பிரதமர் மோடியின் பேச்சை பல்வேறு தலைவர்களும் பொதுமக்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அவற்றில் சில, “
https://twitter.com/bilalify_/status/1782094906929860942
I’m as much worried about people who cheer for hate speech as the one who makes it.
— T.N. Raghu @ TNR (@tnrags) April 21, 2024
Yet another shameful #hatespeech by #NarendraModi. 10 years in power, and yet, the blood lust is not over yet: more anti-#Muslim rhetoric; and more love from a #communally polarised crowd https://t.co/RClQNz1Bep
— RadhakrishnanRK, PhD. (@RKRadhakrishn) April 21, 2024
If the prime minister of the country uses such language for 20 cr Muslims, What better can you expect from people like T Raja, Yati Naraginghanand, Pragya etc.
This will now give green signal to many others to openly speak against Muslim community. Directly.— Mohammed Zubair (@zoo_bear) April 21, 2024
தோல்வி பயத்தில் மோடி அவர்கள் பிதற்ற ஆரம்பித்துவிட்டார்.
இஸ்லாமியர்களை கேவலம் ஓட்டுக்காக இப்படி பேசலாமா?
நெஞ்சம் பதைபதைக்கிறது! #HateMongers #HateSpeech https://t.co/cGdcbaRPpL— Saravanan Annadurai (@saravofcl) April 21, 2024
No words. Just no words. How can a PM speak like this? Depressing day. 🤦🤦
— Sumanth Raman (@sumanthraman) April 21, 2024
ஓட்டுக்காக மதப்பிரிவினை பேசும் மோடியை போல ஒரு கேடு கெட்ட அயோக்கியனை பார்த்ததே இல்லை!
விசம்.. விசம்.. உடல் முழுக்க மூளை முழுக்க விசம்!
மனித மத ரத்தம் கேட்கும் மகாபாவி.. த்தூ😡😡😡
— Surya Born To Win (@Surya_BornToWin) April 21, 2024
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் !
— Iyan Karthikeyan (@Iyankarthikeyan) April 21, 2024
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’ஆர்சிபி ஆசீர்வாதம் வேணுமா? : அப்டேட் குமாரு
RCBvsKKR : ஒரு ரன்னில் பரிதாப தோல்வி… ஆபத்தில் ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் கனவு!