சென்னை ஈசிஆரில் ”மாமல்லன் நீர்த்தேக்கம்”- அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்

Published On:

| By Mathi

CM Stalin Mamallan Dam

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் “மாமல்லன் நீர்த் தேக்கத்துக்கு” முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஜனவரி 19-ந் தேதி அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “ கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

ADVERTISEMENT

நீர்ப் பாதுகாப்புக்காகப் பாடுபடும் 15 NGO-களின் அக்கறையை அங்கீகரித்து சிறப்பு விருதுகளையும் இவ்விழாவில் வழங்கிப் பாராட்டினேன்.

வான் பெய்து, நிலம் நனைத்து, கடல் சேரும் நீரைக் கரை கட்டி, நெடுவயல் நிறையவும் – மக்களின் தாகம் தணியவும் செயலாற்றுவோம்! என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share