பனி முற்றிலும் விலகாத இப்போதைய சூழ்நிலையில் தொண்டைக்கு இதமாக இருக்கும் இந்த கஷாயம் அனைவருக்கும் ஏற்றது. ரிலாக்ஸ் டைமில் அருந்துங்கள். புத்துணர்ச்சி பெறுங்கள்.
**எப்படிச் செய்வது?**
நான்கு அல்லது ஐந்து முழு கிராம்புடன் பொடித்த கிராம்புத்தூள் சிறிதளவு சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும். இதை அடுப்பில் வைத்து கொதிக்கவைத்து ஒரு கப்பாகச் சுண்டியதும், வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லத்தைச் சேர்க்கவும். கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பருகவும்.
**சிறப்பு**
தொண்டைக்கு இதமாக இருக்கும். சருமப் பிரச்சினைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளைப் போக்கும். கண்களில் இருக்கும் கருவளையத்தை நீக்கும்.�,