அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக ஜனவரி 12ம் தேதி வெளியாக இருக்கும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்து இருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் படம் என்றாலே ஆடியோ வெளியீட்டு விழாவும், அவரின் குட்டி ஸ்டோரியும் கேட்க அவரது ரசிகர்கள் ஆவலோடு இருப்பார்கள். ஆனால் பீஸ்ட் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்தபடி மேற்கூறிய சம்பவம் நடைபெறவில்லை.
இதனையடுத்து பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு முன்னதாகவே, தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி, கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தமன், நடிகர்கள், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினரும் அரங்கிற்கு வந்துவிட்டனர்.
அவர்களோடு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோர் நிகழ்விற்கு வருகை தந்துள்ளனர்.
இன்று காலை முதலே ஸ்டேடியத்திற்கு முன்னதாக ரசிகர்கள் குவிந்த நிலையில், நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்னதாக ரசிகர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதனை கண்ட அஜித் ரசிகர்கள் இணையத்தில் ’அய்யோ அம்மா ஆடியோ லாஞ்ச்’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் கிரே கலர் சட்டை, வெள்ளை நிற பேண்ட்டில் விஜய் நுழைய ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர்.
இதனைக்கண்ட விஜய், உடனடியாக ரசிகர்கள் அருகில் அமைக்கப்பட்ட மேடையில் நடந்து சென்று அனைவரையும் பார்த்து கையசைத்து ரசிகர்களின் வரவேற்பினை ஏற்றுக்கொண்டார்.
நடிகர் விஜய்யை மிக அருகிலேயே கண்டு ரசித்த ரசிகர்கள், அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் மற்றும் விஜே ரம்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில், விஜய்யின் பேச்சைக் கேட்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
”ராகுலின் யாத்திரை அடுத்து வரும் ஒளிமயமான தலைமுறைக்கானது!” – கமல்
“அரசை விட தனியார் நிறுவனங்கள் நல்ல சம்பளம் தரும்” – உதயநிதி ஸ்டாலின்