வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் ‘விடுதலை’. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ கதையைத் தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி ஒரு குற்றவாளியாகவும், சூரி காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகப் படம் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் ஒரு சேர முடிக்க உள்ளனர். படம் குறித்து முன்பு வெற்றிமாறன் கூறுகையில் கதையின் நாயகன் விஜய் சேதுபதி, ஆனால் படத்தின் ஹீரோ சூரி எனக் கூறி இருந்தார். இதன் மூலம் கதையில் இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இதுமட்டுமல்லாமல், ‘விடுதலை’ படத்தை முடித்த பின்பே வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் ‘வாடிவாசல்’ படத்தைத் தொடங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிரா