ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணி: அமேசான் காட்டில் ஷூட்டிங்?

சினிமா

பாகுபலி 1&2 படங்களின் மூலம் 1000 கோடி ரூபாய் வசூல் என்ற புதிய மைல் கல்லை தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸில் அறிமுகப்படுத்தி வைத்தவர் பிரபல இயக்குனர் ராஜமௌலி.

அதன் பிறகு பிரசாந்த் நீலின் கே.ஜி.எஃப் 1&2, ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் ஆகிய படங்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இந்திய திரை உலகையே பிரமிக்க வைத்தது.

ஆர் ஆர் ஆர் படத்திற்குப் பிறகு அடுத்ததாக ராஜமௌலி எந்த கதாநாயகனுடன் இணையப் போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் 29ஆவது படத்தை ராஜமௌலி இயக்குவார் என்ற தகவல் சமீபத்தில் வெளியான உடன் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில், தற்போது வரும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு ராஜமௌலி – மகேஷ்பாபு கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ராஜமௌலி இயக்க இருக்கும் SSMB 29 படம் ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அமேசான் காடுகளில் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. SSMB 29 படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜனவரி மாதம் இறுதியில் SSMB 29 படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும், ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அட்லீயை நாம் கொண்டாட வேண்டும்: சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

எதிர்க்கட்சிகளுக்கு சர்க்கரை பொங்கல்: அப்டேட் குமாரு

இந்தியாவில் 7 கோடி வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்…என்ன காரணம்?

எல்லாமே ரொம்ப மோசமா இருக்கு… வைரலாகும் தங்கலான் நடிகையின் பதிவு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *