அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் வெறும் 6 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தாண்டு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன், ராஷ்மிகா மந்தனா , ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ 294 கோடி வசூலித்தது.

இதன்மூலம் முதல்நாளில் அதிக வசூலை ஈட்டிய இந்திய திரைப்படம் என்ற பெருமை பெற்றது. முன்னதாக ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முதல் நாளில் 233 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது.
தொடர்ந்து இரண்டாம் நாளில் ரூ.449 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.621 கோடியும், ஐந்தாம் நாளில் ரூ. 922 கோடியும் வசூலித்தது.
இந்த நிலையில் ஆறாம் நாளில் 1002 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தை தயாரித்த மைத்ரி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அதிவேகமாக 1000 கோடி ரூபாய் வசூல் அள்ளிய இந்திய திரைப்படம் என்ற பெருமையுடன் சாதனைப் படைத்துள்ளது புஷ்பா 2.
முன்னதாக உலகளவில் ஆயிரம் கோடி வசூல் ஈட்டிய இந்திய திரைப்படங்களாக ஆமீர் கானின் தங்கல், பிரபாஸின் பாகுபலி 2, கல்கி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணின் ஆர்.ஆர் ஆர் , யாஷின் கே.ஜி.எஃப் 2 , ஷாருக்கானின் பதான் , ஜவான் உள்ளன.
விரைவில் இந்த அனைத்து படங்களின் வசூல் சாதனையையும் புஷ்பா 2 முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
பெரியார் நினைவகம் திறப்பு : கேரளா சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!