என்னை மாற்றியது என் மனைவி தான்: மனம் திறந்த ரஜினி

Published On:

| By Kavi

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர்ஸ்டார் யார், வாரிசு வசூலை துணிவு முறியடித்ததா, என்பது போன்ற விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்த், என்னை அன்பால்  ஒழுக்கமிக்கவனாக மாற்றி, என்னை வாழவைத்தவர் என் மனைவி தான் என மனம் திறந்து பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் புதிதாய் தொடங்கியுள்ள SARP PRODUCTIONS மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்பட உள்ள “சாருகேசி” திரைப்படம் குறித்த அறிவிப்பு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, “1975-ல் அபூர்வராகங்கள் படத்தில் நடித்திருந்தேன். அப்போது கண்ணதாசன் மகனான கண்மணி சுப்பு  அவரிடம் வெளியே எங்காவது ஷூட்டிங் இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்லி இருந்தேன். 

அதற்கு அவர்  மயிலாப்பூர் கல்யாண மண்டபத்தில்  ‘ரகசியம் பரம ரகசியம்’ நாடகத்தை நடத்துகிறோம். சுந்தர்ராஜன், ஜெயசுதா ஆகியோர் நடிக்கிறார்கள். அங்கு வாருங்கள் என்று கூறி என்னை அவர் வரவழைத்தார்.

உடனே நான் அங்கு சென்றேன். நான் செருப்பு போட்டு இருந்ததை பார்த்து, வெளியே இருந்தவர்கள் என்னை உள்ளே விட வில்லை.

அரை மணிநேரம் காத்திருந்தேன். அதன்பின்னர் அபூர்வராகங்கள் படத்தின் ஆடை வடிவமைப்பாளர் என்னை பார்த்து என்ன சிவாஜி இங்கே நிற்கிறீர்கள் என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றார்.

அங்கே சென்று பார்த்தால் நீள முடிவைத்த வாட்டசாட்டமான ஒருவர் பாலசந்தர் சாரையே டேய் பாலு.. அங்க பாரு,. இங்க பாரு என்று பேசிக்கொண்டிருந்தார். 

எனக்கு பாலச்சந்தர் சாரையே யார் இப்படி கூப்பிடுகிறார் என்று ஆச்சரியம். அதன்பின்னர் லட்சணமாக ஒரு பெண் வந்தார். யாரென்று பார்த்தால் அதுதான் ஒய்.ஜி. பார்த்தசாரதின் மனைவி. அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தமும் அவ்வளவு அழகாக இருக்கும். அப்போதுதான் நான் நாடகத்திற்காக அவர்கள் எடுக்கும் பயிற்சியை பார்த்தேன்.

அதன் பின்னர் அவர் குடும்பத்தில் ஒருவனாகி, 45 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு சிறப்பு விருந்தினராக உட்கார்ந்து இருக்கிறேன் என்றால், இது காலத்தின் விளையாட்டு. இந்தக்காலம் யாரை எப்போது மேலே கொண்டு போகும், எப்போது கீழே இறக்கும் என்று தெரியாது.

ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க 45 வருடத்திற்கு முன்பு உள்ளே சென்றபோது, என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் சாருகேசி நாடகத்தின் 50வது நாள் விழாவில் தலைமை விருந்தினராக வந்திருக்கிறேன் என்றால் எல்லாம் அந்த காலத்தின் செயல். ஜெயலலிதா, நாகேஷ், சோ, விசு போன்றவர்கள் ஒய்.ஜி. பி நாடகக்குழுவில் இருந்து வந்தவர்கள்.

பாதுகாப்பும் கண்ணியமுமிக்க நாடக குழுவினராக திகழ்ந்தனர். சினிமாவிலும், நாடகத்திலும் கதை திரைக்கதை மிகவும் முக்கியம். படித்தவர்களும் பட்டதாரிகளும் பல துறை வல்லுனர்களும் இந்த நாடக குழுவில் இருந்தனர்.

சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் இந்த நாடகத்தைக் கண்டு மகிழ்ந்திருப்பார். ஒய்.ஜி மகேந்திரனுக்கு சினிமாவைவிட நாடகம்தான் முக்கியம்.

my wife who has changed me Rajinikanth

எனது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் என்கிற முறையில், ஒய்.ஜி மகேந்திரனுக்கு நான் கடன்பட்டுள்ளேன். நடத்துனராக இருக்கும்போது தினமும் சிகரெட், மது குடிப்பேன், நாள்தோறும் இரண்டு முறை மாமிசம் சாப்பிடுவேன்.

சைவப் பிரியர்களை பார்த்தால் அப்போது எனக்கு பாவமாக தெரியும். பெயரும்புகழும் வந்த பின் எப்படி இருந்திருப்பேன் இதை அளவுக்கு மீறி அதிகம் எடுத்தவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்தது இல்லை. இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன.

என்னை அன்பால்  ஒழுக்கமிக்கவனாக மாற்றி, என்னை வாழவைத்தவர் என் மனைவி.

மது, புகைபிடிக்கும் பழக்கம், அசைவ பழக்கம் போன்றவை ஒரு காலத்தில் என்னோடு ஒட்டி இருந்தது. அதை மாற்றியவர் எனது மனைவி தான் அதற்கு காரணமான ஒய்.ஜி.மகேந்திரனுக்கு நன்றி.” என்றார்.

ராமானுஜம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கவனம்… நான்கு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது!

கிச்சன் கீர்த்தனா: கோதுமை உசிலி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share