பொன்னியின் செல்வன்- 2: லைகா கொடுத்த அப்டேட்!

சினிமா

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக எடுத்துள்ளார்.

இப்படத்தில், கார்த்திக், விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

லைகா புரோடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.

சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

வெளியான முதல் நாளே திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடினர். தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று உலகளவில் 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் பலரும் காத்திருந்தார்கள்.

இந்நிலையில் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் கொடுக்க உள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த அப்டேட் மகிழ்ச்சியளித்துள்ளது.

மோனிஷா

தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லையென்றால்… தினகரன் புது முடிவு!

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு: விசாரணை தள்ளிவைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.