ஜெயம், உனக்கும் எனக்கும், M. குமரன் S/O மகாலட்சுமி, வேலாயுதம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குநர் மோகன் ராஜா.
2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் அவரது தம்பியும் நடிகருமான ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான “தனி ஒருவன்” மெகா ஹிட் படமாக அமைந்தது.
சமீபத்தில் தனி ஒருவன் 2 படத்தை இயக்குவதாக இயக்குநர் மோகன் ராஜா அறிவித்தார். தனி ஒருவன் முதல் பாகத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தனி ஒருவன் 2 புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது.
தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த நடிகை நயன்தாரா இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றார்.
தனி ஒருவன் 2 படத்திற்கு பின்பாக மோகன் ராஜா ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் ஆன நடிகர் சிரஞ்சீவியின் அடுத்த படத்தை மோகன் ராஜா இயக்க போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான Godfather படம் நல்ல வரவேற்பை பெற்றது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த Lucifer படத்தின் ரீமேக் தான் இந்த Godfather என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் மோகன் ராஜா – சிரஞ்சீவி கூட்டணி உருவாகும் புதிய படத்திற்கு BVS ரவி கதை எழுதியிருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தற்போது நடிகர் விஜய்யின் GOAT, பிரதீப் ரங்கநாதனின் டிராகன் ஆகிய படங்களில் பிஸியாக உள்ளது.
இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தனி ஒருவன் 2 படத்தின் பணிகளை தொடங்கி விடும் என்று கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் ரிலீஸ் அப்டேட்!
6ஆம் கட்ட தேர்தல்… 11.13 கோடி வாக்காளர்கள்… விறுவிறு வாக்குப்பதிவு!
வாழ்க்கையில் ஏற்படும் முரண்பாடுகளை எப்படி கையாள்வது?
டாப் 10 செய்திகள் : 6ஆம் கட்ட தேர்தல் முதல் ரிமெல் புயல் வரை!