மூன்றாவது நாளாக அன்புசெழியன் வீட்டில் ஐடி ரெய்டு!

சினிமா

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் மூன்றாவது நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னனி தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை குறிவைத்து வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, சத்யஜோதி தியாகராஜன், பிரின்ஸ் பிக்சர் லட்சுமண் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது.

மூன்றாவது நாளாக சோதனை

அன்புசெழியன் வீடு,அலுவலகம் மற்றும் இவருக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அன்புசெழியன் மட்டுமல்லாது இவரது சொந்தகாரர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் கடந்த இரு தினங்களாக சோதனை நடந்தப்பட்டது. இன்று மூன்றாவது நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருகிறது. நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புசெழியன் சகோதரர் அழகர்சாமியின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதில் பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோனிஷா

உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *