இயக்குநர் லிங்குசாமிக்கு  6 மாதம் சிறை!

சினிமா

செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

தமிழில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, ஜி, அஞ்சான் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் லிங்குசாமி.

இவர் கார்த்தி, சமந்தாவை வைத்து இயக்கும், ’எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்திற்காக பிவிபி கேபிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ. 1.03 கோடி கடனாக பெற்றுள்ளார்.

கடனை திருப்பி கேட்டபோது அதற்காக காசோலை கொடுத்திருக்கிறார் லிங்குசாமி.

Director Lingusamy jailed

ஆனால் அந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி இருக்கிறது.

இதனால் லிங்குசாமி மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது பிவிபி நிறுவனம். இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ்சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக லிங்குசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

கலை.ரா

உச்ச நீதிமன்றம் யாருக்கு?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *