மூன்று காலகட்ட கதைகளத்தில் ‘பாம்பாட்டம்’!
கதைகளம், காட்சி அமைப்புகள், கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில் நுட்பம் என ‘பாம்பாட்டம்’ படத்தில் பரவச அனுபவத்திற்கு பஞ்சமிருக்காது” என்று இயக்குனர் வி.சி.வடிவுடையான் தெரிவித்துள்ளார்.
பாம்பாட்டம் படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் வி.சி.வடிவுடையான்.
வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள ‘பாம்பாட்டம்’ ஒரு சாம்ராஜ்யத்தின் கதை. அந்த சாம்ராஜ்யத்தின் ராணியாக மல்லிகா ஷெராவத். ‘திருட்டு பயலே’, ‘நான் அவனில்லை’ படங்களின் நாயகன் ஜீவன் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் பற்றி இயக்குனர் வி.சி.வடிவுடையான் கூறுகையில், “பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையுமே ஒரு பரமபதம்தான். அதுபோல ஒரு சாம்ராஜ்யத்தின் பரமபத ஆட்டம்தான் ‘பாம்பாட்டம்’.
அந்த சாம்ராஜ்யம் சந்திக்கும் ஏற்ற, இறக்கங்கள்தான் படத்தின் கதை, கி.பி.1000, 1500, 1980 என மூன்று காலகட்டங்களில் கதை டிராவல் ஆகும். இதற்கான செட், உடைகள், அந்தந்த காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தும் சூழ்நிலை என நிறைய மெனக்கெடல் இருந்தது.
மும்பையில் பலகோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கினோம். படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். குடும்பமாக வந்து ரசிக்கும் அளவுக்கு படத்தில் சுவாரஸ்யங்கள் இருக்கும்.
போர்க் காட்சிகளுக்காக பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. மும்பை தவிர,சென்னை, மைசூர் அரண்மனை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.”என்றார்.
‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலரை நேற்று மாலை தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ஆர்யா வெளியிட்டார்.
இராமானுஜம்
தமிழ்நாட்டு மருமகளான மஞ்சிமா மோகன் யார்?
ராஜீவ்காந்தி கொலை: காயமடைந்த பெண் அதிகாரிக்கு மிரட்டல்!