புதுச்சேரியில் கடலுக்கு மேலே அஜித்துக்கு ரசிகர்கள் பேனர் வைக்க, விஜய் ரசிகர்கள் கடலுக்கு உள்ளே பேனர் வைத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்து இருக்கும் வாரிசு திரைப்படங்கள் வரும் ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றன.
இரண்டு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்பதால் வரும் பொங்கல் பண்டிகையில் தியேட்டர்கள் களைகட்டும். தற்போது முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு படங்கள் பொங்கலுக்கு வருவதற்குள் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அளவிட முடியாத வகையில் சென்று கொண்டிருக்கிறது. அதிலும் புதுச்சேரியில் எங்கு திரும்பினாலும் அஜித்- விஜய் கட் அவுட்டுகள், பேனர்கள் என இருக்கிறது.
இதற்கு பால் அபிஷேகம் செய்தும் பட்டாசு வெடித்தும் அன்னதானங்கள் கொடுத்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி காந்தி சிலை அருகே பழைய பாலத்தின் தூண்களில் அஜித் ரசிகர்கள் பேனர் கட்டி துணிவு படத்திற்கு வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இதற்கு போட்டியாக விஜய் ரசிகர் வம்பாக்கீரப்பாளையத்தில் கடலுக்கு அடியில் நீச்சல் வீரர்களின் உதவியுடன் வாரிசு படத்துக்கு வாழ்த்து பேனர்களை வைத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்!
முதல் முறை அமைச்சராக சட்டப்பேரவைக்கு வரவிருக்கும் உதயநிதி