ஞானவேல் ராஜாவின் சூழ்ச்சிக்கு பலியாக மாட்டேன்: அமீர்

Published On:

| By Selvam

ameer clarifies gnanavel raja accusation

ஞானவேல் ராஜாவின் சூழ்ச்சிக்கு பலியாக மாட்டேன் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். ameer clarifies gnanavel raja accusation

அமீர் இயக்குனராக காரணம் நடிகர் சூர்யா தான் என்றும், அவர் நிறைய பொய் கணக்குகள் சொல்வார் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ் அளித்த பேட்டி தமிழ் திரையுலகில் முக்கிய பேசுபொருளாக மாறியது.

இந்தநிலையில் மெளனம் பேசியதே படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் ரகு மின்னம்பலத்திற்கு அளித்த பேட்டியில், “அமீர் மீது ஞானவேல் ராஜா சுமத்திய குற்றச்சாட்டுகளில் உண்மை கிடையாது” என்று தெரிவித்திருந்தார்.

ameer clarifies gnanavel raja accusation

இந்தநிலையில் ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு அமீர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருத்‌திவீரன்‌ தொடர்பான வழக்கு, இன்னும்‌ நீதிமன்றத்‌தில்‌ நிலுவையில்‌ இருக்கின்ற காரணத்‌தினால்‌, வழக்கறிஞரின்‌ அறிவுறுத்தலின்‌ பேரிலேயே நான்‌ இன்னும்‌ பதிலளிக்காமல்‌ இருக்கிறேன்‌.

அதன்‌ காரணமாகவே, ஊடக நண்பர்களைச்‌ சந்‌திக்காமலும்‌ இருக்கிறேன்‌. இதில்‌, வேறு எந்த காரணமும்‌ கிடையாது. இருந்தாலும்‌, தொடர்ச்சியாக இப்பிரச்னை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்‌ சென்று கொண்டிருக்கின்ற காரணத்‌தினால்‌, சில விளக்கங்களை அளிக்க நான்‌ விரும்புகிறேன்‌.

பருத்‌திவீரன்‌ தொடர்பாகவும்‌, என்னுடைய திரைப்பயணம்‌ தொடர்பாகவும்‌, ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில்‌ ஒன்றில்‌ கூட உண்மையில்லை. அனைத்தும்‌, புனையப்பட்ட பொய்கள்‌. இது முழுக்க முழுக்க சமூகத்தில்‌ எனக்கு இருக்கும்‌ கண்ணியத்தைக்‌ குறைக்கும்‌ நோக்கத்தோடும்‌, திரைத்துறையில்‌ என்னுடைய பயணத்தை தடைசெய்யும்‌ நோக்கத்தோடும்‌ திட்டமிட்டு நடத்தப்படும்‌ பொய்ப்பிரசாரமே.

ameer clarifies gnanavel raja accusation

பருத்‌திவீரன்‌ திரைப்படம்‌ தொடர்பாக, எனக்கும்‌ ஞானவேல் ராஜாவுக்கும்‌ இடையே எந்த ஒரு ஒப்பந்தமும்‌ போடப்படவில்லை. எனவே, இல்லாத ஒப்பந்தத்தை நான்‌ மீறவும்‌ இல்லை. படத்‌தின்‌, முதல்‌ கட்டப்‌ படப்பிடிப்புக்கு அவர்‌ வழங்கிய தொகையைத்‌ தவிர அடுத்தடுத்த காலகட்டங்களில்‌ படப்பிடிப்புக்கான தொகையைத்‌ தராமல்‌ படத்தை பாதியிலேயே நிறுத்‌திவிட்டு காணாமல்‌ போனவர்‌ அவர்‌. அதன்‌ பின்னரே,எனது TEAM WORK PRODUCTION HOUSE நிறுவனத்தின்‌ மூலம்‌ அந்தப்‌ படத்‌தின்‌ படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன்‌.

மேலும்‌, பருத்‌திவீரன்‌ படப்பிடிப்புச்‌ சூழல்‌ முழுவதையும்‌ முற்றாக அறிந்த, இன்றைக்கு திரைத்துறையில்‌ உயர்ந்த இடத்தில்‌ இருக்கும்‌ என்‌ சகோதரர்களும்‌, பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும்‌ இப்பிரச்சினையில்‌, அமைதியாக வேடிக்கை பார்த்துக்‌ கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.

பருத்‌திவீரன்‌ திரைப்படம்‌ எந்த சூழலில்‌ தொடங்கப்பட்டது? தொடங்குவதற்கான காரணம்‌ என்ன? என்ற உண்மையை அறிந்த பெரிய மனிதர்களும்‌, எனக்கு வாக்கு கொடுத்து “படத்தை நீங்களே வெளியிடுங்கள்‌” என்று சொன்னவர்களும்‌, அன்றும்‌ வேடிக்கை பார்த்தார்கள்‌. இன்றும்‌ பார்த்துக்‌கொண்டிருக்கிறார்கள்‌.

பருத்‌திவீரன்‌ திரைப்படத்‌தின்‌ இறுதிக்கட்ட பஞ்சாயத்தை, நடத்‌தியவர்களும்‌, முடித்து வைத்தவர்களும்‌, சாட்‌சிக்‌ கையெழுத்திட்டவர்களும்‌ இன்றளவும்‌ அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ameer clarifies gnanavel raja accusation

மொத்தத்தில்‌, 17 வருடங்களுக்கு முன்பு என்‌ கை பிடித்து வாக்கு கொடுத்தவரின்‌ அன்புக்கு கட்டுப்பட்டு வேலை செய்த நான்‌, இன்று சமூகத்தில்‌ குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறேன்‌.

நடந்த உண்மைகளைச்‌ சொல்வதற்கு எனக்கு சில மணி நேரங்களே போதுமானது. ஆனால்‌, அது பலருடைய வாழ்க்கையில்‌ புயலைக்‌ கிளப்பிவிடும்‌ என்ற காரணத்‌தினாலும்‌, ஒட்டு மொத்த திரையுலகத்தையும்‌ திசை திருப்பி விடும்‌ என்ற காரணத்‌தினாலுமே நான்‌ அமைதி காக்‌கிறேன்‌. வேறு எதற்காகவும்‌ அல்ல.

உண்மை இப்படியிருக்க, ஞானவேல்‌ என்னைப்‌ பற்றி கூறிய விசயங்களால்‌ நான்‌ அடைந்த மன உளைச்சலை விட என்‌ குடும்பத்தாரே அவரால்‌ அதிகம்‌ பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்‌ என்ற போதிலும்‌, நானும்‌, என்‌ குடும்பத்தாரும்‌ இதையெல்லாம்‌ கடந்து வந்து விடுவோம்‌, துளியும்‌ அவரது சூழ்ச்சிக்கு பலியாக மாட்டோம்‌ என்பதைத்‌ தெளிவாக தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

மேலும்‌, அவரை வழிநடத்தும்‌ பெரியவர்கள்‌, “இதுபோல்‌ யாரையும்‌ அவதூறாக பொதுவெளியில்‌ பேச வேண்டாம்‌” என அவருக்கு அறிவுறுத்துமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

பூமியில்‌, “அநியாயமும்‌, அக்‌கிரமங்களும்‌, அநீதியும்‌ தலை விரித்தாடுகின்ற போது கண்ணன்‌ அவதாரம்‌ எடுப்பார்‌” என்ற கதையின்‌ வாசகத்தைப்‌ போல, தமிழகத்தில்‌ நடக்கும்‌ இந்நிகழ்வுகளுக்கு, அமெரிக்காவில்‌ இருந்து நடந்த உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த என்னுடைய நண்பரும்‌, தயாரிப்பாளருமாருமாகிய கணேஷ்‌ ரகுவுக்கு உளப்பூர்வமான, கோடான கோடி நன்றிகள்‌” என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களுக்கு நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன் ‘பருத்திவீரன்” இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை” என்று தெரிவித்துள்ளார். ameer clarifies gnanavel raja accusation

அமீர் இயக்குனர் ஆக Surya காரணமா? நடந்தது என்ன? Producer Ganesh Raghu Interview | Ameer Vs Gnanavel

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜஸ்தான் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

கிச்சன் கீர்த்தனா: முடக்கத்தான் கீரை – காய்கறி பணியாரம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel