டெல்லி புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த், என்ன காரணம்?

சினிமா

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையிலிருந்து (ஆகஸ்ட் 6) டெல்லி புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டான் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்த்-ஐ கதாநாயகனாக வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்க உள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையில் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்மோகன், யோகிபாபு, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

ஜெயிலர் படப்பிடிப்பிற்காக சென்றுள்ளாரா?

ஜெயிலர் படத்தின் பட பூஜை சென்னையில், சன்பிக்கசர்ஸ் அலுவலகத்தில் நடந்த பிறகு ஐதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக சன் பிக்கர்ஸ் தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை படத்தின் பூஜை நடைபெறாமல் உள்ளது. எனவே, படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற பிறகே படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் பூஜை டெல்லியில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.

ஜெயிலர் படத்தின் கூடுதல் அப்டேட்கள் விரைவில் படக்குழு மூலம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோனிஷா

முன்னாள் மனைவிகள்: ஆமீர்கான் சொன்ன ஆச்சரிய தகவல்!

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *