75ஆவது சுதந்திர தினம்: 75 பாடகர்கள் 75 பாடல்களுடன் இசை நிகழ்ச்சி!

சினிமா

சாதகப் பறவைகள் இசைக் குழுவினருடன் JR – 7 நிறுவனம் இணைந்து இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாகக் கொண்டாட உள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகம், உணவகங்கள், கடைகள் இடம் பெறவுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், “இந்தியாவிலேயே முதன்முறையாக 75 பாடகர், பாடகியரை ஒரே மேடையில் ஒன்றிணைத்து ஒரு நாள் முழுவதும் இசைத் திருவிழாவாகக் கொண்டாட இருக்கிறோம். 75 பின்னணி மற்றும் முன்னணி பாடகர், பாடகியரும் 75 பாடல்களைப் பாடும் ஒரு முழு இசை நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமையும். இந்நிகழ்ச்சியின் மூலம் ‘UNITED SINGERS CHARITABLE TRUST’ என்ற அமைப்பிற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாகவும் இது அமையும். இந்நிகழ்ச்சியின் வாயிலாகத் திரட்டப்படும் தொகையிலிருந்து ஒரு பகுதியை இந்த அமைப்பிற்கு உதவித் தொகையாக வழங்க உள்ளோம் .அனைத்து துறைகளிலிருந்தும் 75 முக்கிய பிரமுகர்களை இந்நிகழ்ச்சியில் எங்களுடன் இணைந்து கொண்டாட அழைத்திருக்கிறோம்.
இந்நிகழ்ச்சியை நாங்கள் 3 பகுதிகளாக வடிவமைத்து இருக்கிறோம். காலை 10 மணியளவில் இந்நிகழ்ச்சி பிரபலங்களுடன் துவங்கி பின் திரையிசைப் பாடகர்களுடன் பகல் 12 மணிவரை நடை பெறும். அடுத்த பகுதி 3 மணியிலிருந்து 5 மணிவரையிலும், அதற்கடுத்த பகுதி மாலை 6.30 மணியளவில் தொடங்கி நள்ளிரவு 12 மணிவரையிலும் நடைபெறும். கடைசி பகுதியில் நம் திரையிசைத் துறையில் சாதித்த சாதனையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வழங்க உள்ளோம்.முதன்முறையாகப் பார்வையாளர்கள் அனைவரையும் திரையிசைத் துறையின் 75 வருடத்திற்கு முன்னோக்கி அழைத்துச் செல்ல இருக்கிறோம்.
ஜி.ராமநாதன் ஐயர், பாபநாசம் சிவன் மற்றும் எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள் இசையமைத்த பாடல்களில் துவங்கி, பின் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் மற்றும் வி.குமார் அவர்களின் பாடல்களைப் பாடவிருக்கிறோம்.
இந்நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும்’ ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடைய பாடல்களைத் தனி பகுதியாகவே பாடத் திட்டமிட்டுள்ளோம். இதன் தொடர்ச்சியாகத் தேவா, வித்யாசாகர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுடைய பாடல்களைப் பாடவிருக்கிறோம். மேலும் இளம் இசையமைப்பாளர்களான டி.இமான், அனிருத் ரவிச்சந்தர், சந்தோஷ் நாராயணன் போன்ற பல இசையமைப்பாளர்களின் பாடல்களும் இந்நிகழ்ச்சியில் இடம் பெறும். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக அனைத்து பிரபலங்கள், பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் நம் தேசிய கீதத்தை ஒன்றாக இணைந்து பாடிய பின்பு இந்நிகழ்ச்சி நிறைவு பெறும்.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த நம் மாநிலத்தைச் சேர்ந்த சாதனையாளர்களுக்குச் சாதனையாளர் விருதையும் வழங்க உள்ளோம்.இந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்களையும், பிரச்சாரத்தையும் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் செய்யவிருக்கிறோம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட விழைகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமானுஜம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *