ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றன.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் இணைந்த இண்டியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் போட்டி நிலவியது.
இந்தநிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 தொகுதிகளிலும் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளன. ஆர்ஜேடி 4 இடங்களை கைப்பற்றியுள்ளது.
பாஜக 21 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில் ஜார்க்கண்ட்முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் இந்திய கூட்டணிக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று (நவம்பர் 23) அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. உருவாக்கினாலும் – அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் வென்றுள்ளார்.
அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” என்று வாழ்த்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
மேஜர் முகுந்தின் திருமணத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? – இந்துவின் தந்தை சொன்ன காரணம்!