சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (மே 20) கையெழுத்தானது. அதன்படி சென்னை ஐஐடி வளாகத்தில் அமைய உள்ள மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு இளையராஜா இன்று அடிக்கல் நாட்டினார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “கிராமத்துல இருந்து மியூசிக் கத்துக்கிறதுக்காக சென்னைக்கு வந்தேன். எனக்கும் பிரதர் பாஸ்கருக்கும் அம்மா 400 ரூபா கொடுத்து அனுப்புனாங்க.
மியூசிக் கத்துக்குறதுக்காக சென்னை வந்த நான், இன்னைக்கு ஆராய்ச்சி மையத்துல எல்லோருக்கும் மியூசிக் கத்துக்கொடுத்துக்கிட்டு இருக்கேன்.
நான் பொறந்த ஊர்ல மியூசிக் கத்துக்கொடுக்க ஆள் இல்லை. நான் அச்சீவ் பண்ணிட்டேன்னு எல்லோரும் சொல்றாங்க. எனக்கு அப்படி ஒன்னும் தெரியல.
கிராமத்துல இருந்து எப்படி கிளம்பி வந்தேனோ, அப்படி தான் இப்போதும் இருக்குறதா நான் உணருறேன். இந்த இன்ஸ்டியூட்ல 200 இளையராஜா வரணும். மூச்சு விடுவதை போல மியூசிக் எனக்கு நேச்சுரலா வருது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: மத்திய நிதி அமைச்சராகும் பிடிஆர்? ஸ்டாலின் நடத்திய ’கேபினட்’ டிஸ்கஷன்!