பராமரிப்பு பணி காரணமாக இன்று (அக்டோபர் 31) தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை போக்குவரத்தில் முக்கிய பங்கு புறநகர் ரயில்களுக்கு உண்டு. நாள்தோறும் இந்த ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் இன்று சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் 2.44 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரைக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 மணி முதல் 3.20 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம், திருமால்பூரில் இருந்து காலையில் புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. இன்றைய தினம் மொத்தம் 53 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ஆனால் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதால் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவேளையில் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பிரதமர் தொடங்கி வைக்கும் இந்திய – வங்கதேச ரயில் சேவை!
பியூட்டி டிப்ஸ்: அடிக்கடி உதடுகளில் வரும் கொப்புளங்கள்… காரணமும் தீர்வும்!