மழையால் குளிர்ந்த சென்னை… கூடுதல் மழைக்கு குறி சொன்ன வெதர்மேன்!

Published On:

| By christopher

கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் சுமார் 100 நாட்களுக்கு பிறகு சென்னையில் இன்று (மே 8) அதிகாலை பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டிற்குள் அடைபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த நாட்களாக தமிழ்நாட்டின் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னையில் சுமார் 100 நாட்களுக்கு பிறகு  அடையாறு, மைலாப்பூர், வடபழனி, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, தாம்பரம், வண்ணார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது.

சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், ஆலந்தூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், அசோக் நகர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று முதல் வரும் 11 ஆம் தேதி வரை 4 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி பாரன்ஹீட் வரைபடிப்படியாக குறையும். மே 8 முதல் 11ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 37.4 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெய் ஜக்கமா நல்ல காலம் பொறக்க போகுது !!! உச்ச கோடை வெயில் குறைய போகுது, தமிழ்நாட்டில் நல்ல மழை வர போகுது” என்று பதிவிட்டுள்ளது சுட்டெரிக்கும் வெயிலால் சூடான மக்களுக்கு குளிர்ச்சியடைய செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனு: விசாரணை எப்போது?

தக் லைஃப் : சிம்புவின் மரண மாஸ் கெட்டப்.. அறிமுக வீடியோ இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share