ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பாகிஸ்தான் மீது தொடுத்து அங்குள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்தெறிந்தது.
இதனையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. people dont panic due to war
இந்தநிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் அருணிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆணையர் அருண் “போர் பதற்றம் காரணமாக, கோவில், தியேட்டர், மால், கடற்கரை உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் பலப்படுத்தியுள்ளோம். people dont panic due to war
வாகனங்களின் சோதனையை அதிகரித்துள்ளோம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் எதற்காகவும் அச்சப்படத் தேவையில்லை. அவர்களுடைய பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்யும்” என்று தெரிவித்தார்.
