தாம்பரம் – கடற்கரை ரயில்கள் ரத்து…மாற்று ஏற்பாடு என்ன?

Published On:

| By Minnambalam Login1

chennai beach tambaram

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் நாளை இயங்காது என்று தென்னக ரயில்வே துறை இன்று(செப்டம்பர் 21) அறிவித்துள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு வேலைகள் நடக்கவிருப்பதால், நாளை(செப்டம்பர் 22) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இயங்காது.

அதற்குப் பதிலாக சென்னை கடற்கரை- பல்லாவரம் இடையே, சிறப்புப் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ஆனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் அரக்கோணம் நோக்கிச் செல்லும் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும். அதனால் பயணிகள் தங்கள் பயணத்தை இதற்கேற்றவாறு திட்டமிட்டுக்கொள்ளவும் என்று தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

போலீஸ் நடத்தும் வாகன வசூல்- சட்டம் ஒழுங்குப் புகார்கள்… ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் சிறப்புப் பேட்டி!

டெல்லி முதல்வரானார் அதிஷி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share