பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இன்று (டிசம்பர் 20) இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் நாளை (டிசம்பர் 21) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 9.35, 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் வருகிற 23, 24ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று (டிசம்பர் 20) முதல் 24ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 9.30, 10 மற்றும்11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று மற்றும் நாளை (டிசம்பர் 21) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20, 11.40, 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் வருகிற 23 மற்றும் 24ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-ராஜ்