சென்னையிலிருந்து சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால் விஜயவாடா – விசாகப்பட்டினம் இடையே 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்கத்தா நோக்கி சரக்கு ரயில் ஒன்று இன்று (நவம்பர் 9) அதிகாலை சென்று கொண்டிருந்தது.
அதிகாலை 3 மணியளவில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி ரயில் நிலையம் அருகே ஐ.எல்.டி.டி மேம்பாலத்தில் சென்றபோது சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது.
இதனால் விஜயவாடா – விசாகப்பட்டினம் இடையே இன்று ஒன்பது பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்.
விஜயவாடா – விசாகப்பட்டினம், விசாகப்பட்டினம் – விஜயவாடா, குண்டூர் – விஜயவாடா, காக்கிநாடா – விஜயவாடா என இன்று இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
மேலும் இரண்டு ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சரக்கு ரயில் தடம் புரண்ட ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கலை.ரா
