சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ரேசன் அட்டை இல்லாதவர்களும் வெள்ள நிவாரண நிதி பெற விண்ணப்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கடந்த 3 மற்றும் 4ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
தொடர்ந்து மீட்பு பணிகளை அரசு தீவிரப்படுத்திய நிலையில், பெரும்பாலான இடங்களில் தற்போது பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையே மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே நிவாரண நிதி என்று முதலில் கூறப்பட்டது. அதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டை இல்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் நிவாரண நிதி பெற விண்ணப்பிக்கலாமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ரேஷன் அட்டை இல்லாதவர்களும் வெள்ள நிவாரண நிதி பெற அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி அவர்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்று, அதில் தங்களின் வங்கிக் கணக்கு விவரம், வசிக்கும் வீட்டின் முகவரி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் அத்துடன் குறிப்பிட்ட வீட்டில் வசிப்பதற்கான ஆவணங்களையும் இணைத்து ஒப்படைக்க வேண்டும்.
அதனைதொடர்ந்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் மற்றும் வசிப்பிடத்தின் வெள்ள பாதிப்பை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு அதன் அடிப்படையில் நிவாரண நிதி வழங்குவதற்கு முடிவு செய்வார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’மவுனம்’ காக்கும் சூர்யா… மறக்காமல் நன்றி சொன்ன அமீர்
இணையத்தில் ட்ரெண்டாகும் ‘Thala For A Reason’: காரணம் என்ன?
Video: அடிச்ச அடியில இப்படி நொறுங்கி போச்சே… மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங்!