சம்மர் ஸ்பெஷல்: பசியைத் தூண்டும் பானம்
கோடை வெயில் என்றாலே மக்கள் பதைபதைக்கும் காலமாக மாறிவிட்டது. வெயிலிலிருந்து தப்பித்துக்கொள்ள உணவு வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். வெயிலின்போது அருந்தக்கூடிய அதற்கான பிரத்யேக பானங்களில் ஒன்று இது.
**என்ன தேவை?**
எலுமிச்சைச் சாறு – 5 டீஸ்பூன்
தோல் சீவி துருவிய இஞ்சி – 2 டீஸ்பூன்
சர்க்கரை – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
இஞ்சித் துருவலுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்து ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பருகவும்.
**என்ன பலன்?**
எலுமிச்சைப் பழத்தில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இஞ்சி, பசியைத் தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்குத் தேவையான வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாய்வை நீக்கும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.�,