வங்கிக் கடனுக்காக மகனை ரூ.9,000-க்கு விற்ற தாய்!

Published On:

| By christopher

Bihar couple sells their Baby Boy

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பிகார் பெண் ஒருவர், பெற்ற மகனை ரூ.9,000-க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், அராரியா மாவட்டத்தில் ராணிகஞ்ச் தொகுதியின் பச்சிரா கிராமத்தில் வசித்துவரும் முகமதுஹரூன் – ரெஹானா கட்டூன் தம்பதி, வறுமை காரணமாக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.50,000 கடன் பெற்றுள்ளனர். இந்த கடனின் தவணையை செலுத்த முடியாததால் தனது குழந்தையை வெறும் ரூ.9,000-க்கு விற்றுள்ளனர்.

‘தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனின் தவணை, கடந்த மூன்று மாதங்களாக நிலுவையில் இருந்ததால் மிகுந்த அழுத்தத்தில் இருந்தேன். தவணையை செலுத்தக்கூறி நிறுவனத்தின் முகவர்கள் எங்களைத் துன்புறுத்தினார்கள்.

கடனைத் திருப்பிச் செலுத்தாததால் எங்கள் மீது வழக்கு தொடரப்போவதாகக் கூறினர். இதன் பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக குழந்தையை விற்கும்படி என் சகோதரர் தன்வீர் கூறியதால் நான் குழந்தையை விற்க முடிவு செய்தேன்’ என்று தாய் ரெஹானா கூறியுள்ளார்.

இந்தத் தம்பதிக்கு ஐந்து மகன்கள், மூன்று மகள்கள் என எட்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் குர்ஃபான் என்ற ஒன்றரை வயது குழந்தையை விற்றுள்ளனர்.

ரெஹானாவின் சகோதரர் தன்வீர் இதற்கு ஏற்பாடு செய்துள்ளார். அந்தக் குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்பவரிடம் ரூ.9,000-க்கு விற்றதாக தன்வீர் தெரிவித்துள்ளார். ஆனால், குழந்தைக்கு ரூ.45,000 கொடுத்ததாக ஆரிஃப்பின் உறவினர் கூறுகின்றனர்.

ஆரிஃப்பிடம் இருந்து தன்வீர் எவ்வளவு பெற்றார் எனத் தனக்குத் தெரியாது என்றும் தனது குழந்தையை விற்க தன்வீரால் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் குழந்தையின் தாய் ரெஹானா, காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆரிஃப் அந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு பெங்களூருவில் உள்ள ஒருவருக்கு விலை பேசியுள்ளார்.

குழந்தையை பெங்களூருவுக்கு அனுப்புவதற்கு முன்னதாகவே தகவல் அறிந்த காவல்துறையினர், குழந்தையை ஆரிஃப் வீட்டில் இருந்து பத்திரமாக மீட்டு, குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைத்தனர்.

குழந்தையின் பெற்றோர் முகமதுஹரூன் – ரெஹானா கட்டூன் இருவரும் போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முரண்களை முடக்குவது பாசிசம், முரணரசியலே மக்களாட்சி!

டாப் 10 நியூஸ் : ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வரை!

கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா புலாவ்

டிஜிட்டல்  திண்ணை:  எடப்பாடி – விஜய்… 2026 மாஸ்டர் பிளான் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share