‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மறுத்தவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜனவரி 13) நடைபெற்றது. ஏற்கனவே பிகார் , கர்நாடகா, டெல்லியில் நடந்த கூட்டங்களுக்கு தலைவர்கள் நேரில் சென்று கலந்துகொண்ட நிலையில், இன்று நடந்த 5ஆவது கூட்டத்தில் காணொளி காட்சி மூலமாக பங்கேற்றனர்.
இதில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டில் இருந்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tamil Nadu CM & DMK leader @mkstalin and party leader Kanimozhi Karunanidhi attend the meeting of I.N.D.I.A bloc leaders via video conferencing.
Download editorji app: https://t.co/rj8bQb5wD9 pic.twitter.com/qqtpkFHmpp
— editorji (@editorji) January 13, 2024
அதுபோன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வில்லை.
இக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு, பாரத் ஜோடா நியாய யாத்ரா, மக்களவை தேர்தல் பணிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
அதோடு இந்தியா கூட்டணிக்கு தலைவரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
28 கட்சிகள் கொண்ட இந்த கூட்டணிக்கு மல்லிகார்ஜுன கார்கே தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக இந்தியா கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் நிதிஷ் குமார் ஒருங்கிணைப்பாளராக முன்மொழியப்பட்டிருக்கிறார். ஆனால் இதை ஏற்க நிதிஷ் குமார் மறுத்துள்ளார்.
இதுகுறித்து நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் சஞ்சய் ஜா கூறுகையில், ”இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர்தான் இருக்க பேண்டும் என்று நிதிஷ் குமார் விரும்புகிறார்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அரசு மருத்துவமனைகளில் ஓராண்டே போதுமாம்: மருத்துவ மாணவர்களுக்கு அரசின் சலுகை!