மூடப்படும்  1,800 சுகாதார மையங்கள்: காரணம் என்ன?

Published On:

| By Minnambalam

பீகார் மாநிலத்தில் 1,800 சுகாதார மையங்கள் மூடப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு அதற்கான காரணம் குறித்தும் விளக்கியுள்ளது.

பீகார் மாநில சுகாதார மையங்கள் மூடப்படுவது தொடர்பாகப் பேசியுள்ள வாரியத் தலைவர் அசோக் குமார் கோஷ்,

“விதிகளைப் பின்பற்றி மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாத 1,800 சுகாதார மையங்கள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் உள்ள 1,800 சுகாதார மையங்களுக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மையங்கள் அகற்றுவதற்கு அமைக்கப்பட்ட விதிகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீண்டும் பின்பற்றாதபட்சத்தில் சுகாதார மையங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மேலும், இந்த சுகாதார மையங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்படும். இதுகுறித்து பலமுறை நினைவூட்டியும் மருத்துவ மையங்களை சரி செய்யாததால் வாரியம் இந்த கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவ மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் விளக்கியுள்ளார்.

-ராஜ்

டிஎன்பிஎஸ்சி: குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்னை டூ மைசூரு: வந்தே பாரத் ரயிலின் 10 சிறப்பம்சங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share