பிக்பாஸ் போட்டியாளர் நிக்ஸனின் பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் வீட்டில் இருந்து ரவீனா, நிக்ஸன் என அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறினர். இதனால் தற்போது வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைந்துள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிக்ஸன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமாக போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஐஷு, பூர்ணிமா என பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களுடன் நெருக்கமாக பழகி ரசிகர்களின் விமர்சனங்களுக்கு உள்ளான நிக்ஸன் அதுகுறித்து தன்னுடைய பதிவில் எதுவும் சொல்லவில்லை.
மாறாக, ”உள்ள கப் ஜெயிக்கணும் போகல. என்ன நல்லவனா காட்டிக்கணும் போகல. நா யாருன்னு நான் தெரிஞ்சிக்க போனேன்.
என்கிட்ட இருக்க நல்ல விஷயங்கள பாராட்டுன எல்லாருக்கும் நன்றி. நன்றின்னு வார்த்தைல சொன்னா பத்தாது வேலையில காட்டுறேன்”, என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
கிளாம்பாக்கம் : பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்களின் பெற்றோர் போராட்டம்!
”தகுதியில்லா நிர்மலா சீதாராமனை நீக்க வேண்டும்: ஐ.ஆர்.எஸ். அதிகாரி குற்றச்சாட்டு
