”என்னை மன்னித்து விடுங்கள்” பிக்பாஸ் ஐஷு உருக்கம்!

Published On:

| By Manjula

bigg boss aishu asking sorry

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஐஷு உருக்கமாக மன்னிப்பு கேட்டு, போஸ்ட் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இளம் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் ஐஷு. இறுதிப்போட்டி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக 42-வது நாளில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

நிக்ஸனின் கூடா நட்பே ஐஷு வெளியேறக் காரணமாக இருந்தது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இதுகுறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி கொடுத்த போதும் ஐஷு வரவில்லை. அதோடு இறுதிப்போட்டி மற்றும் பிக்பாஸ் விருந்து என எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

bigg boss aishu asking sorry

என்றாலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது, புகைப்படங்கள் பதிவிடுவது என அவர் ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.

குறிப்பாக அர்ச்சனா-ஐஷு இருவரும் பிக்பாஸ் வீட்டில் போட்டுக்கொண்ட சண்டையை அவர் தன் தங்கையுடன் சேர்ந்து ரீ-கிரியேட் செய்திருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.

ஐஷு தன்னுடைய பதிவில், ”பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா. எல்லாவற்றையும் விட நான் உங்களை அதிகமாக நேசிக்கிறேன். இதுவரை நான் செய்த அனைத்து குழப்பங்களுக்கும் என்னை மன்னித்து விடுங்கள்.

அனைவருக்கும் உங்களின் வேடிக்கையான பக்கம் மட்டுமே தெரியும். ஆனால் நீங்கள் ஒரு வலிமையான பெண். அனைத்து வலிகளையும் சிரிப்பு என்ற முகமூடி அணிந்து நீங்கள் சமாளித்து வருகிறீர்கள்.

நம்முடைய அனைத்து பிரச்சினைகளையும் இருவரும் சேர்ந்தே சமாளிப்போம். ஒருநாள் நான் நீங்களாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்,”இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஐஷுவின் அம்மா சைஜிக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விழாக் கோலத்தில் அயோத்தி… வந்தார் மோடி

ராமர் சிறப்பு பூஜை:  கோயிலில் மணியடித்த இஸ்ரேல் தூதர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share