பீகார் சட்டமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி நிதிஷ்குமாரின் ஜேடியூ 81 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 2025 தேர்தலி 43 இடங்களில் வென்ற ஜேடியூ இம்முறை இரு மடங்கு தொகுதிகளை கூடுதலாக கைப்பற்றுகிறது.
பீகாரில் 2015 சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜேடியூ 71 தொகுதிகளிலும் பாஜக 53 இடங்களிலும் வெறறி பெற்றிருந்தன.
ஆனால் 2020 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியாக இருந்த போதும் ஜேடியூ அதிக இடங்களில் வென்றுவிடக் கூடாது என்பதற்காகவே, கூட்டணியை விட்டு வெளியேறிய சிராக் பாஸ்வான் கட்சியை பல தொகுதிகளில் பாஜக ஆதரித்தது. இதனால் ஜேடியூ வ் வெறும் 43 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. கடந்த தேர்தலில் பாஜக 74 இடங்களைக் கைப்பற்றியது.
தற்போதைய தேர்தலிலும் ஜேடியூவும் பாஜகவும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது, தொடக்கத்தில் ஜேடியூவை விட பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்தது.
ஆனால் முற்பகல் 11 மணி நிலவரப்படி ஜேடியூ 82 தொகுதிகளிலும் பாஜக 81 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் ஜேடியூ 2 மடங்கு அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றும் நிலை உள்ளது. பாஜகவின் சூழ்ச்சிகளை தகர்த்து ஜேடியூவும் நிதிஷ்குமாரும், ‘பழைய பன்னீர்செல்வமாக’ (சத்ரியன் படத்தில் விஜயகாந்தை பார்த்து வில்லன் நடிகர் சொல்லும் வசனம்) மீண்டு எழுந்துள்ளது ஜேடியூ தொண்டர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
