மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பின்னணி பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று (ஜனவரி 25) இலங்கையில் உள்ள கொழும்பு மருத்துவமனையில் காலமானார்.
இதையடுத்து இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு மூவரும் இலங்கைக்கு சென்றனர். தொடர்ந்து பவதாரிணி உடல் விமானம் மூலம் சென்னைக்கு இன்று மாலை கொண்டு வரப்பட்டது.
தற்போது பவதாரிணி உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டில், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 10 மணி வரை பவதாரிணி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.அதற்கு பின்னர் அவரது உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி பண்ணைப்புரத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பவதாரிணி பேட்டியளித்த பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Just thinking about #ilayaraaja now
She was always a daddy's girl
Life is cruel 😭😭💔💔💔#ripbhavatharini
Your voice will stay forever in our hearts FYI #Swarnalatha died of lung disease at 37 years and now bhavatharini at 47
Such special talents 💔💔💔 #KamalHaasan @RKFI pic.twitter.com/i62ZDR8J2Z
— முரட்டு பக்தன் : கமல் பா.சிவா மதுரை (@kamalsivayouth) January 26, 2024
அதில் அப்பா இளையராஜா இசையில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் கமல்ஹாசன் நடிப்பில், ‘கலைஞன்’ படத்தில் இடம்பெற்ற, ‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா’ பாடல் தான் என கூறுகிறார்.
தொடர்ந்து அந்த பாடலின் வரிகள் சிலவற்றையும் பவதாரிணி பாடிக்காட்டுகிறார். இந்த வீடியோ காண்பவர் கண்களில் நீரை வரவழைப்பதாக இருக்கிறது என, ரசிகர்கள் இதுகுறித்து உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
அன்பு மகளே… pic.twitter.com/GgtnKGyvQ1
— Ilaiyaraaja (@ilaiyaraaja) January 26, 2024
தன்னுடைய மகள் குறித்து இசைஞானி இளையராஜா சமூக வலைதளத்தில் உருக்கமாக, ”அன்பு மகளே” என பதிவிட்டு, பவதாரிணியுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகளை இழந்த துயரம் : பவதாரிணி குறித்து உருக்கமாக பதிவிட்ட இளையராஜா
சென்னை விமான நிலையத்தில்… லாக் செய்யப்பட்ட யுவன், வெங்கட் பிரபு கார்கள்!